Saturday, January 28, 2006

மனதில் உறுதி வேண்டும்

வயது ஏற ஏற நாம் தனிமையில் கழிப்பது பற்றி அறிந்து கொள்ள வேண்டும். புத்தகங்களும் இயற்கையும் நமது நண்பர்களாக இருக்க வேண்டும். இன்றைய சூழ்நிலையில் வலைப்பதிவு நல்ல பொழுது போக்கு.

எதுவுமே நமக்கு இல்லை என்று கருதக் கூடாது.. உயரம் குறைவான நெப்போலியன், எப்பொழுதும் ஏதாவது உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட காந்தி, வயதான பின்னும் சேவையைத் தொடர்ந்த அன்னை தெரசா போன்றவர்களை வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும்.

நாங்கள் குட்டிச் சாத்தான்களா?

"பேய்க்கு வாழ்க்கைப் பட்டவ புளியமரத்துல ஏறித்தானே ஆகணும்.."
சலித்துக் கொண்டு கிளம்பினான் கணவன்.

"ஆமா..இருபது வருஷமா நான் அதைத் தான் செய்துட்டு இருக்கேன்" என்றாள் மனைவி.

குழந்தைகள் திகைத்தன. "அப்படி என்றால் நாங்க பேய்க்கும் பேய்க்கும் பிறந்த குட்டிச் சாத்தான்களா ?" என்று கேட்டன.

குழந்தைகள் கேள்வியில் கணவனும் மனைவியும் மிரண்டனர்.
இனிமேல் குழந்தைகள் முன்னிலையில் சண்டை போடாமல் இருக்கலாம் என்று உறுதி செய்து கொண்டனர்.

பெற்றோர் பல பாடங்களை குழந்தைகளிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டியதிருக்கிறது போலும்!

Monday, January 02, 2006

சோதனைப் பதிவு

இது ஒரு சோத்னைப் பதிவு