Saturday, February 18, 2006

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்

ரயில் ஓடிக் கொண்டிருந்தது.
வெளியில் ஒரு கோபுரம் தெரிந்தது.
பெரியவர் ஒருவர் கன்னத்தில் போட்டுக் கொண்டார்.
தன் பேரனையும் போடச் சொன்னார்.

பக்கத்தில் இருந்தவரிடம்,
"கோபுர தரிசனம் கோடிப் புண்ணியம்" என்றார்.

சக பயணி இதைக் கேட்டு சிரித்தார்.
"ஏன் சிரிக்கிறீர்கள்?" என்றார் பெரியவர்.

"ஐயா! அந்த ஊரில் குடியிருப்பவர்களுக்கு தினமும் கோபுர தரிசனம் தான்.
ஆனால் புண்ணியம் மட்டும் கிடைக்கவில்லையே? அது மட்டுமில்லை..தாழ்த்தப்பட்ட மக்களைக் கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டு தூரத்தில் இருந்து கும்பிட்டு விட்டுப் போ என சாதி ஆதிக்கத்தோடு செய்யப்பட்ட சதி இது" என்றார்.

சக பயணிகள் சிந்திக்கத் தொடங்கினர்.

நன்றி: தீக்கதிர் 18.02.2006
சிந்தனை வங்கி
சு.பொ.அ

0 Comments:

Post a Comment

<< Home